Tuesday 25 November 2014

உடல் பருமன்


தி.நகர் போயிருந்தோம். தவிர்க்க முடியாம ரங்கநாதன் தெருவைக் கடந்து போக வேண்டியிருந்தது. அவ்வளவு கூட்டத்துலயும் கொஞ்ச தூரம் முன்னாடி நின்னு ஏதோ நோட்டீஸ் குடுத்துட்டு இருந்த ஒருத்தர் வேகவேகமா முன்னாடி வந்து என்கிட்ட நோட்டீஸ் குடுக்க முண்டியடிச்சுட்டு வந்தார்.

எனக்கு நோட்டீஸ் வாங்க விருப்பம் இல்லாததாலயும் ரெண்டு கையிலயும் பைகள் வச்சிருந்ததாலயும் எட்டி வாங்க முடியல. அவரோ விடாப்பிடியா நீட்டிக்கிட்டே நடந்து வந்துட்டு இருக்க எனக்கு எரிச்சலாகவும் அதே சமயம் பாவமாவும் இருந்தது.

"ஏதாச்சும் கம்ப்யூட்டர் கோர்ஸ்சுக்கான டீட்டெய்ல்ஸ் இல்லேன்னா ஜவுளிக் கடை, நகைக்கடைகளோட தீபாவளி ஆஃபர் பத்தி இருக்கும். என்னையப் பார்த்தா காலேஜ் ஸ்டூடண்ட் (!!!!!!!) மாதிரி தெரியுதோ இல்ல நெறைய பர்ச்சேஸ் பண்ற மாதிரி தெரியுதோ இவ்ளோ கூட்டத்துலயும் தேடி வந்து என்கிட்ட நோட்டீஸ் குடுக்குறாரு பாருங்க"ன்னு கொஞ்சம் பெருமையா இவர் கிட்ட அலுத்துக்கிட்டே "சரி வாங்கிக்கோங்க"ன்னு சொன்னதும் இவரும் வாங்கிக்கிட்டாரு.

வாங்கிப் படிச்சதும் ஒரு மாதிரி சிரிச்சுக்கிட்டே தலையைத் திருப்பிட்டாரு. "குடுங்க அந்த நோட்டீச பார்ப்போம்"னு சொன்னேன். இவர் மறுபடியும் சிரிச்சுக்கிட்டே "வீட்டுக்குப் போய் பொறுமையா பார்க்கலாம் வா"ன்னு சொன்னாரு.

"அப்டீன்னா ஏதோ ஜவுளிக்கடை நகைக்கடை ஆஃபர் தான் போல.நான் பார்த்தா அங்க போகணும்னு சொல்லுவேன்னு தான நோட்டீச குடுக்க மாட்டேங்குறீங்க. எனக்குத் தெரியும்"னு நான் கண்டுபிடிச்சதைச்(???) சொன்னேன்.

அவர் சிரிச்சுட்டே நோட்டீசை கசக்கிய எறியப் போக, நான் வலுக்கட்டாயமா அவரை நிறுத்தி கையில இருந்த பைகளையெல்லாம் இறக்கி வச்சுட்டு நோட்டீசைப் பிடிங்கிப் படிச்சுப் பார்த்தா 



"ஙே" 

"உடல் பருமன். . . . குறைப்பது எப்படி?"

இதுக்குத்தான் கூட்டத்துல தேடி வந்து நோட்டீஸ் குடுத்தாய்ங்களா  அடிங்ங்ங்ங்ங்ங்ங்

1 comment:

  1. எங்க ஊர்ல ''இயேசு அழைக்கிறார்''னு சொல்லி குடுத்துட்டு இருக்காங்க...

    ReplyDelete