Tuesday 25 November 2014

இனிமே எல்லாம் இப்டி தான்


மாடியில காயப் போட்ட துணியை எடுக்கப் போயிருந்தேன். ரொம்ப நேரமா தெருவில பட்டாசுச் சத்தம் கேட்டுட்டே இருந்தது. என்ன சத்தம்னு கீழ எட்டிப் பார்த்தா தெருவில யாரோ இறந்துட்டாங்க போல. வழியெல்லாம் பூவா தூவிட்டு இறந்தவரை வண்டியில எடுத்துட்டுப் போய்ட்டு இருந்தாங்க.

அதுக்கு மேல பார்க்கப் பயந்துட்டு பேசாம துணிகளை எடுத்துட்டு இருந்தேன். பக்கத்து வீட்டுப் பாட்டி வேடிக்கை பார்க்க மாடிக்கு வந்தாங்க. ஈரத் தலைய துவட்டிட்டே கீழ எட்டிப் பார்த்துட்டு “கொஞ்ச வயசு தான் போல”

“நான் கவனிக்கல பாட்டி. எனக்கு இதெல்லாம் பார்க்க ரொம்ப பயம்”

“அட....இப்டில்லாம் பயப்படக்கூடாதும்மா. தைரியமா இருக்கணும்”

“ம்ம்”

“நம்ம பில்டிங்க்கு ரெண்டு பில்டிங் தள்ளி காலியா இருக்க இடத்துல தான் திதி குடுப்பாங்க தெரியுமா?” (வீட்டுக்குப் பின்னாடி ஏரி இருக்கு)

“அய்யய்யோ ....அப்டியா ..எனக்கு தெரியாதே பாட்டி”

“ஆமா ..அடிக்கடி பார்க்கலாம். இதெல்லாம் பார்த்து பயப்படக் கூடாது”

“ம்ம்”

“இப்போ நாங்க இருக்க வீட்ல இதுக்கு முன்னாடி இருந்த ஃபேலிமில ஒருத்தங்க தூக்கு மாட்டிக்கிட்டாங்களாம். நாங்க குடி வந்த பிறகு தான் தெரியும். அதுக்கு என்ன பண்றது”

“ஆங்ங்ங்  "

“அதோ அந்த மாடி ஓரமா பக்கத்து வீட்டு தண்ணி தொட்டி இருக்குல்ல”

“ஆமா”

“அங்க தான் கொத்த வேலை செஞ்சுட்டு இருந்த கொஞ்ச வயசுப் பையன் இருத்தன் தவறி விழுந்து செத்துட்டான்”

“அய்யோ பாட்டி .இதெல்லாம் சொல்லாதீங்க. நான் ரொம்ப பயப்படுவேன்”

"நானும் உன்ன மாதிரி வயசுல பயப்படுவேம்மா. இப்போல்லாம் பழகிப் போச்சு. ஹா ஹா ஹா “

நல்லா காய்ஞ்சிருந்த வெள்ளை முடி காத்துல நாலா பக்கமும் பறக்க சிரிச்சுட்டு இருந்த பாட்டியப் பார்க்கவே பயமா இருந்தது.

“பாட்டி உங்க காலுக்கிட்ட க்ளிப் ஒண்ணு கிடக்கு பாருங்க”

பாட்டி லேசா சேலையை இழுத்து காலுக்குக் கீழ பார்க்க, ”நல்ல வேள இருக்கு”

“எங்கேம்மா காணோமே”

“நான் கால சொன்னேன் பாட்டி”

“:o"

“சரி பாட்டி நான் வரேன்”

“சாயங்காலம் பொழுது போகலேன்னா மாடிக்கு வாம்மா. நான் இங்க தான் இருப்பேன்”

”நான் எங்க வீட்டு பால்கனிலயே கொடி கட்டி துணி காயப் போடப் போறேன் பாட்டி”

“ஏம்மா”

“இனிமே எல்லாம் அப்டித்தான் பாட்டி”

“ஆங்ங்ங்ங்”

No comments:

Post a Comment