Tuesday 25 November 2014

பழிக்குப் பழி

"இதென்ன......சோத்துல உப்பே இல்ல"

"பக்கத்துல தான உப்பு டப்பா இருக்கு. போட்டுக்கோ"

"குழம்புல காரம் ஜாஸ்தியா இருக்கு"

"இனிமே குழம்பு வைக்கும் போது மிளகாப்பொடி கொஞ்சம் குறைச்சுப் போட்டா சரியா போச்சு"

"ப்ச். . .பொரியல்ல காய் இன்னும் கொஞ்சம் வதக்கியிருக்கணும்"

"பரவால்ல போகப் போக சரியாகிடும்"

"கடவுளே . . . . இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்டில்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு சாப்பிடணுமோ"

"அடிப்பாவி .....உனக்கு முன்னாடி சாப்பிட்ட நானே ஒண்ணும் சொல்லாம கம்முன்னு இருக்கேன். நீ சமைச்சத நீயே இவ்ளோ குறை சொல்லிட்டு சாப்பிட முடியலைங்குற"

"நீங்க தான் முதல்லயே சாப்பிட்டீங்கல்ல. அப்பவே உப்பு, காரம் சரியில்லைன்னு சொல்ல வேண்டியது தான. நான் சாப்பிட்டு பார்த்து சொல்ற வரைக்கும் கம்முன்னு இருக்கீங்க????"

"பின்ன...... நான்லாம் எப்டி உன்ன பழி வாங்குறது"

"ஞே "

No comments:

Post a Comment