Saturday 24 October 2015

பாட்டியும் நானும்

பக்கத்து வீட்டுப் பாட்டி அவங்க ஊருக்குப் போயி ரெண்டு மாசம் ஆச்சு...பத்து நாளைக்கு ஒரு தரம் ஃபோன் பண்ணி எப்டி இருக்கேன்னு விசாரிச்சுக்குவாங்க. என்னை விட அவங்க மருமகளைப் பத்தி தான் விசாரிப்பாங்க பேரனை நல்லா பார்த்துக்குறாங்களான்னு...வழக்கமான மாமியார் தான். இன்னைக்கும் ஃபோன் பண்ணிருந்தாங்க.
“எப்டி இருக்க கண்ணு”
“நல்லாருக்கேன் பாட்டி”
“தம்பி நல்லாருக்குதா ...ஆஃபீஸ் போயிருக்கா?”
“ஆமா பாட்டி..நீங்க தாத்தால்லாம் நல்லாருக்காங்களா”
“ஆங்ங் எங்களுகென்ன...இருக்கோம் கண்ணு”
“ம்ம்”
“என் மருமவ வந்தாளா உங்க வீட்டுக்கு”
“நேத்து வந்தாங்க பாட்டி...இன்னைக்கு வரலையே”
“ஆங்ங் அதாங்கேட்டேன்”
“ஏன் பாட்டி என்னாச்சு”
“அது ஒண்ணுமில்லம்மா”
“அட சும்மா சொல்லுங்க பாட்டி”
“இல்லம்மா...ஒண்ணுமில்ல”
“ஏதோ சொல்ல வந்தீங்க...இப்ப ஒண்ணுமில்லங்குறீங்க...சொல்லுங்க பாட்டி”
“அய்ய...அதொண்ணுமில்ல கண்ணு...முந்தாநாளு வீட்டுக்குப் பின்னாடி ஏரியில யாரோ விழுந்து செத்துட்டாங்களாமாம்னு ஃபோன்ல சொல்லிச்சு...அதான் தேவிக்கு தெரியுமான்னு கேட்டேன்...இல்ல அவங்களுக்கு தெரியாது போலன்னு சொன்னா”
“ம்ம்”
“நாந்தான் அவகிட்ட இதெல்லாம் சொல்லாத...அது ஏற்கனவே பயந்து கிட்டு இருக்கும்னு சொல்லிவச்சேன்...அதான் உங்கிட்ட சொல்லிட்டாளோ என்னமோன்னு நெனைச்சு ஃபோன் பண்ணேன்”
“ gasp emoticon "
"அதெல்லாம் நீயொண்ணும் மனசுல நெனைச்சு பயந்துக்காத கண்ணு....நல்லா சாப்புடு...உடம்ப பார்த்துக்க...வச்சுரட்டா”
“ஆங்ங்ங்”
நான் பாட்டுக்கு செவனேன்னு இருந்தேன்....இப்ப ஃபோனப் போட்டு இப்டி பயமுறுத்திருச்சு பாட்டி gasp emoticon

No comments:

Post a Comment