Saturday 24 October 2015

கதை ஒன்று - காட்சி இரண்டு

கி.ரா-வின் “கோபல்ல கிராமம்” வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
முதல் மரியாதை திரைப்படத்தில் அனைத்துக் காட்சிகளும் சிறப்பாக இருந்தாலும் தண்ணீர் குடிக்க ஆற்றுக்குள் இறங்கும் ரஞ்சனி பொட்டுத் தங்கத்துக்காகக் (கம்மல்) கொலை செய்யப்படும் போது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடி கொலைகாரனின் கால் கட்டை விரலைக் கடித்து துண்டிப்பதாக வரும் காட்சியைப் படம் பார்த்த எவருமே நிச்சயம் மறந்திருக்க முடியாது.
கி.ரா வின் “கோபல்ல கிராமத்திலும்” இப்படியான ஒரு காட்சி வருகிறது. தண்ணீர் தாகத்தை தணித்துக் கொள்ள குளத்தில் இறங்கி நீர் அருந்தும் பெண்ணின் பாம்படங்களைக் கொள்ளையடிக்க முயற்சிக்கும் ஒருவன் அவளைத் தண்ணீரில் அமிழ்த்தி கொலை செய்து பாம்படங்களை அபகரித்துக் கொள்கிறான். அந்தப் பெண் உயிர்ப் போராட்டத்தில் கொலைகாரனின் வலது கால் கட்டை விரலைக் கடித்த படியே உயிரை விடுகிறாள். பின்னர் பிணத்தின் வாயிலிருந்து கொள்ளைக்காரனின் கால் கட்டை விரலை கிருஷ்ணப்ப நாயக்கர் அறுத்து எடுப்பதாக அந்தக் காட்சி அமைந்திருக்கும்.
”முதல் மரியாதை” திரைப்படம் 1985-ம் வருடம் திரைக்கு வந்ததாக விக்கிப்பீடியா சொல்கிறது.
“கோபல்ல கிராமம்” நாவலின் முதல் பதிப்பு 1976-ம் ஆண்டு வெளிவந்திருக்கிறது.
( ஒருவேளை “கோபல்ல கிராமம்” வாசித்த பாதிப்பில் பாரதிராஜா அந்தக் காட்சியை படத்தில் சேர்த்தாரா என்னன்னு தெரியல)

No comments:

Post a Comment