Thursday 14 May 2015

பக்கத்து வீடு


மனதோடு பேசலாம்

தந்தி டி.வியில் மனநல மருத்துவர் டாக்டர்.ருத்ரன் அவர்களோடு பெண் தொகுப்பாளர் ஒருவர் தொலைபேசி வாயிலான நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். ருத்ரன் அவர்கள் எங்கள் பள்ளிக்கு ஒருமுறை வந்திருந்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலான அவரது அன்றைய பேச்சுக்கு நிமிடத்துக்கு நிமிடம் அரங்கம் கைதட்டலால் அதிர்ந்து கொண்டிருந்ததும் நிகழ்ச்சி முடிந்து அவர் வெளியே வந்ததும் நாங்கள் முண்டியடித்துச் சென்று அவரிடம் கையெழுத்து பெற்றதும் நினைவுக்கு வந்தது.
இன்றைய நிகழ்ச்சியில் நேயர் ஒருவர் பேசியது “சார்...எனக்கு ஒரு அண்ணன் இருக்கான். நல்லா தான் இருந்தான் ஆனா இப்போ கொஞ்ச நாளா சரியில்ல. காலேஜுக்குப் போக மாட்டேன்னு சொல்லிட்டான். தண்ணியடிச்சுட்டு ஊரைச் சுத்திட்டு இருக்கான். எங்க வீட்ல யாரோடவும் ஒட்ட மாட்டேங்குறான். சில நேரம் நல்லா பேசுறான். பல நேரம் கடுகடுன்னு இருக்கான். ஃப்ரெண்ட்சுங்களோட சேர்ந்து சுத்திட்டு வீட்டுக்கு சரியா வரமாட்டேங்குறான் சார். எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியல சார்”
தொகுப்பாளர் இப்போது டாக்டர் ருத்ரனிடம் தொலைபேசியில் பேசியவர் சொன்னதை திரும்பவும் ஒருமுறை சுருக்கமாகக் கூறி அதற்கான தீர்வு என்ன என்று கேட்கிறார். (டாக்டர் ருத்ரனும் அந்த நேயர் பேசியதைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தார் என்பது வேறு விஷயம் 
tongue emoticon
 )

டாக்டர் ருத்ரன் “குடிய திருத்துறது பத்தி இப்பல்லாம் பலவிதமான வழிகள நிறைய பேர் சொல்லிட்டு வராங்க. குடிக்குறவங்களுக்கு தெரியாம மருந்து கலந்து கொடுத்தோ, கவுன்சிலிங் கொடுத்தோல்லாம் திருத்த முடியும்கிற மாதிரி விளம்பரங்களப் பரப்பிட்டு இருக்காங்க. ஆனா அப்டில்லாம் அவங்கள திருத்த முடியாது. குடிக்குறவங்க அதை மனசார உணர்ந்து குடிக்குறது தப்புன்னும் அதனால எவ்வளவு பாதிப்புகள் ஏற்படுதுன்னும் உணர்ந்து அவங்களா முன்வந்து குடியை நிறுத்தணும்னு முயற்சி எடுத்தா மட்டும் தான் மத்தவங்க துணையோட அவங்க குடிக்குறத நிறுத்த முடியும். அதுவரைக்கும் யாரும் எதுவும் பண்ண முடியாது. சும்மா அவங்ககிட்ட மனம் விட்டுப் பேசியோ குடிக்குறது தப்புன்னு சொல்லியோல்லாம் புரிய வைக்க முடியாது”ன்னு முடிச்சார்.
நிகழ்ச்சியோட பேரு என்னான்னு பார்த்தேன் ..... “மனதோடு பேசலாம்

Friday 8 May 2015

புன்னகை என்ன விலை

நாலு நாளைக்கு முன்னாடி சென்னைல இருந்து மதுரைக்கு கிளம்பினோம். உதய்க்கு மட்டும் தான் டிரெயின் டிக்கெட் கன்ஃபர்ம் ஆகியிருந்தது. எனக்கு வெயிட்டிங் லிஸ்ட் 1ல வந்து நின்னுருச்சு. வேளச்சேரியில இருந்து கிளம்பி மவுண்ட் ஸ்டேஷன்ல எனக்கு ஒரு ஓப்பன் டிக்கெட் எடுத்துட்டு எலக்ட்டிரிக் டிரெயின்ல எக்மோருக்கு போய்ட்டு இருந்தோம்.
நாங்க உக்கார்ந்திருந்த ஜெனரல் கம்பார்ட்மெண்ட்ல மொத்தமே பத்து பேர் தான் இருந்தாங்க. டிக்கெட் கன்ஃபர்ம் ஆகாத கடுப்புல கொஞ்சம் டென்ஷன்ல இருந்தேன். எதிர்ல ஒரு அம்பது வயசுக்காரர் என்னைப் பார்த்து ஃப்ரெண்ட்லியா சிரிச்சாரு. நான் இருந்த டென்ஷன்ல “யாருய்யா நீ எதுக்கு என்னையப் பார்த்து சிரிக்குற?”ன்னு மனசுக்குள்ளயே கேட்டுட்டு வேற பக்கம் திரும்பிட்டேன். அப்புறமா நைஸா அவர் என்னைப் பார்க்காத நேரம் அவரைப் பார்த்தா அவர் அப்பவும் சிரிச்ச முகமா தான் இருந்தாரு....இன்னும் சொல்லப் போனா அங்கே இருந்த எல்லாருக்குமான புன்னகை ஒண்ணு அவர்கிட்ட இருந்தது.
அந்த சிரிப்பு என்னை ரொம்பவே யோசிக்க வைக்க இவரப் பார்த்து சிரிக்காம இருந்தா மட்டும் டிக்கெட் கன்ஃபர்ம் ஆகிடப்போவுதா என்னான்னு யோசிச்சுட்டே அவரைப் பார்க்க அவர் கிட்ட திரும்பவும் அதே புன்னகை. இந்த முறை நானும் லேசா சிரிச்சு வச்சேன். அவர் கிட்ட இருந்து பதிலுக்கு ஒரு சின்ன ஆமோதிப்பு இதான் என் வெற்றின்னு சொல்ற மாதிரி இருந்தது எனக்கு. மறுபடியும் முகத்தை திருப்பிக்கிட்டேன்.
அடுத்த ஸ்டேஷன்ல பார்வையில்லாத ஒருத்தர் ஏறினார். கையில வச்சிருந்த சின்ன தம்பட்டத்தை தட்டிக்கிட்டே ஒவ்வொருத்தர் பக்கமும் குத்துமதிப்பா நடந்துக்கிட்டே “பூ மழை தூவி“னு பாடிட்டு இருந்தார். இப்போ நம்ம புன்னகை மன்னன் அவரோட சட்டைப்பையில இருந்து சில்லரை எடுத்துப் பாட்டு பாடினவர் பாத்திரத்துல போட்டார். அப்படியே என்னைப் பார்த்து ஒரு புன்னகை.
“ம்ம்...இருய்யா நானும் காசு போடுறேன் பாரு”ன்னு மைண்ட் வாய்ஸ்ல பேசிட்டே உதய் கிட்ட இருந்து காசு வாங்கி நானும் பாத்திரத்துல போட்டுட்டு அவரை நைஸா பார்த்தேன். அதே சிரிப்பு. பார்வையில்லாதவர் சத்தமா பாடிட்டே அந்த கம்பார்ட்மெண்ட்டோட மறுபக்கத்துக்கு மெதுவா நடக்க ஆரம்பிச்சாரு.
அவரோட பாட்டுச்சத்தம் தேயுற வரைக்கும் புன்னகை மன்னன் கால் மேல கால் போட்டு பாட்டுக்கு ஏத்த மாதிரி காலையும் தலையையும் பக்கவாட்டுலயும், மேலயும் கீழயுமா லேசா ஆட்டி அதே புன்னகையோட கேட்டுட்டு இருந்தார்.
எக்மோர் ஸ்டேஷன நெருங்கும் போது தான் சுருக்குன்னு தோணுச்சு. அவர் அந்தப் பார்வையில்லாதவருக்கு வெறும் பிச்சையா அந்தக் காசைப் போடல....அந்தப் பாட்டை ரசிச்சு அதுக்கான சன்மானமாத்தான் குடுத்திருக்கார். ஆனா நான் அப்டிச் செய்யாம வெறும் பிச்சை தான் போட்டிருக்கேன்னு ஒரு குற்றவுணர்ச்சி வந்தது. அந்தப் பார்வையில்லாதவருக்கு நிச்சயமா என்னோட காசு மரியாதை கொடுக்கல..... ஆனா அந்தப் புன்னகை மன்னன் போட்ட காசுல மரியாதையும் சேர்ந்திருந்தது அப்போ தான் உறைக்க ஆரம்பிச்சது.
தோள்ல பேக்கை மாட்டிட்டு கம்பார்ட்மெண்ட் வாசலுக்குப் பக்கத்துல நின்னு திரும்பிப் பார்த்தேன். அவர் இப்பவும் சிரிச்ச முகத்தோட எதிர்ல இருந்தவரப் பார்த்துட்டு இருந்தார். அவர் என்னைப் பார்க்கலைன்னாலும் நான் அவரப் பார்த்து சிரிச்சுட்டு வந்தேன்