Thursday 14 May 2015

மனதோடு பேசலாம்

தந்தி டி.வியில் மனநல மருத்துவர் டாக்டர்.ருத்ரன் அவர்களோடு பெண் தொகுப்பாளர் ஒருவர் தொலைபேசி வாயிலான நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். ருத்ரன் அவர்கள் எங்கள் பள்ளிக்கு ஒருமுறை வந்திருந்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலான அவரது அன்றைய பேச்சுக்கு நிமிடத்துக்கு நிமிடம் அரங்கம் கைதட்டலால் அதிர்ந்து கொண்டிருந்ததும் நிகழ்ச்சி முடிந்து அவர் வெளியே வந்ததும் நாங்கள் முண்டியடித்துச் சென்று அவரிடம் கையெழுத்து பெற்றதும் நினைவுக்கு வந்தது.
இன்றைய நிகழ்ச்சியில் நேயர் ஒருவர் பேசியது “சார்...எனக்கு ஒரு அண்ணன் இருக்கான். நல்லா தான் இருந்தான் ஆனா இப்போ கொஞ்ச நாளா சரியில்ல. காலேஜுக்குப் போக மாட்டேன்னு சொல்லிட்டான். தண்ணியடிச்சுட்டு ஊரைச் சுத்திட்டு இருக்கான். எங்க வீட்ல யாரோடவும் ஒட்ட மாட்டேங்குறான். சில நேரம் நல்லா பேசுறான். பல நேரம் கடுகடுன்னு இருக்கான். ஃப்ரெண்ட்சுங்களோட சேர்ந்து சுத்திட்டு வீட்டுக்கு சரியா வரமாட்டேங்குறான் சார். எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியல சார்”
தொகுப்பாளர் இப்போது டாக்டர் ருத்ரனிடம் தொலைபேசியில் பேசியவர் சொன்னதை திரும்பவும் ஒருமுறை சுருக்கமாகக் கூறி அதற்கான தீர்வு என்ன என்று கேட்கிறார். (டாக்டர் ருத்ரனும் அந்த நேயர் பேசியதைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தார் என்பது வேறு விஷயம் 
tongue emoticon
 )

டாக்டர் ருத்ரன் “குடிய திருத்துறது பத்தி இப்பல்லாம் பலவிதமான வழிகள நிறைய பேர் சொல்லிட்டு வராங்க. குடிக்குறவங்களுக்கு தெரியாம மருந்து கலந்து கொடுத்தோ, கவுன்சிலிங் கொடுத்தோல்லாம் திருத்த முடியும்கிற மாதிரி விளம்பரங்களப் பரப்பிட்டு இருக்காங்க. ஆனா அப்டில்லாம் அவங்கள திருத்த முடியாது. குடிக்குறவங்க அதை மனசார உணர்ந்து குடிக்குறது தப்புன்னும் அதனால எவ்வளவு பாதிப்புகள் ஏற்படுதுன்னும் உணர்ந்து அவங்களா முன்வந்து குடியை நிறுத்தணும்னு முயற்சி எடுத்தா மட்டும் தான் மத்தவங்க துணையோட அவங்க குடிக்குறத நிறுத்த முடியும். அதுவரைக்கும் யாரும் எதுவும் பண்ண முடியாது. சும்மா அவங்ககிட்ட மனம் விட்டுப் பேசியோ குடிக்குறது தப்புன்னு சொல்லியோல்லாம் புரிய வைக்க முடியாது”ன்னு முடிச்சார்.
நிகழ்ச்சியோட பேரு என்னான்னு பார்த்தேன் ..... “மனதோடு பேசலாம்

3 comments: