Monday 17 August 2015

கீதாவும் நானும்

கீதா : சித்தி இன்னைக்கு ஸ்கூல்ல நான் ப்ரீத்திய அடிச்சிட்டேன்
நான் : ஏண்டி அடிச்ச?
கீதா: ஆங்ங் ...அவ என்னைய கருவாச்சின்னு சொன்னா
நான்: அதுக்காக அடிப்பியா... அப்டில்லாம் பண்ணக்கூடாது
கீதா: .......
நான்: அவ உங்க மிஸ் கிட்ட சொன்னா என்ன பண்ணுவ?
கீதா: மிஸ்...மிஸ்...அவளா சுவத்தில முட்டிக்கிட்டு நான் அடிச்சேன்னு சொல்றா மிஸ்னு சொல்லுவேன்
நான்: அடிச்சதே தப்பு ...இதுல பொய் வேறயா...இரு நாளைக்கு உன்ன ஸ்கூல்ல இருந்து கூப்பிட வரும்போது உங்க மிஸ் கிட்ட சொல்றேன்
கீதா :........
நான்: சரி...டிஃபன் பாக்ஸ எடு....ஃபுல்லா சாப்பிட்டியா ?
கீதா: ம்ம்ம் சாப்ட்டேன்
நான்: இதென்ன பீட்ரூட் கலர்ல... லெமன் ரைஸும் உருளக்கிழங்கும் தான உங்கம்மா குடுத்து விட்டா?
கீதா: அது பீட்ரூட் தான் சித்தி...ப்ரீத்தி கொண்டு வந்துருந்தா
நான்: பார்த்தியா... சாப்பாடெல்லாம் ஷேர் பண்ணி சாப்பிடுறீங்கல்ல....இனிமே அவள அடிக்காத...என்ன?
கீதா: ம்ஹும்..அவ என்ன கருவாச்சின்னு சொன்னா நான் அடிப்பேன்
நான்: சரி அப்போ அவகிட்ட பேசாத....சாப்பாடு வாங்கி சாப்பிடாத
கீதா: ஆங்ங்ங் ....எதுக்கு ??? ஷேர் பண்ணி தான் சாப்புடுவோம்.. அவ என் ஃப்ரெண்டு சித்தி ....
நான்: ஷப்பா....அப்போ எதுக்குடி சண்ட போடுறீங்க?
அக்கா : இரு..இப்ப நான் கேக்குறேன் பாரு.....ப்ரீத்தி எதுக்கு உன்ன கருவாச்சின்னு சொன்னா?
கீதா: நான் அவள வெள்ளச்சின்னு சொன்னேன்...அதான் அவ என்ன கருவாச்சின்னு சொன்னா
நான்: அடிங்ங்ங் அப்போ நீ தானா முதல்ல ஆரம்பிச்சது...அத சொல்லவேயில்ல
கீதா: நீங்க தான் கேக்கவே இல்லையே....அம்மா கேட்டாங்க சொன்னேன்...
gasp emoticon gasp emoticon gasp emoticon gasp emoticon