Tuesday 25 November 2014

நானும் என் தனிமையும்

பூட்டிய ஓர் இருட்டறையில்
எதிரெதிரே அமர்ந்திருந்தோம்
ஒருவருக்கொருவர் முகம் பாராது
மூச்சு விடும் சப்தம் கூடக் கேட்காதவாறு
குற்றம் சாட்டும் தொனியில்
என் திசை நோக்கி வந்ததொரு விம்மல்
சலனமற்றிருந்த என்னருகில்
சற்றே தள்ளி அமர்ந்தது
இன்னும் நான் இழக்காமலிருப்பது
உன்னை மட்டுமேயென
உனக்குத் தெரியும் தானே
விடுபடும் வார்த்தைக்காய் மவுனித்திருந்தவள் 
துக்கம் தாளாது சட்டெனச் சரிகிறேன்
என்னைத் தன் தோள் சாய்த்து 
இறுக அணைத்துக் கொண்டது
பூட்டிய ஓர் இருட்டறையில்
கைகோர்த்து அமர்ந்திருக்கிறோம் 
நானும் என் தனிமையும்

No comments:

Post a Comment