Tuesday 25 November 2014

வேற எப்டி இருக்கும்

வீட்டுக்குப் பக்கத்தில இருக்க கடைக்காரர் எங்க அம்மாகிட்ட”உங்க பேத்தி ரொம்ப சேட்டை பண்ணுது”ன்னு கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டுப் போயிட்டாரு.....நான் அவளைக் கூப்பிட்டு ........

”ஓய்ய்ய்.....கீது...இங்க வா....”

“என்ன சித்தி....எப்பப் பாரு வெளாடிட்டுருக்கும் போது தான் கூப்பிடுறீங்க”

”அந்த கடைக்கார அண்ணாச்சி உன்னைய வஞ்சாராம்ல”

“ஆமா”

“எதுக்கு வஞ்சாரு....நீ என்ன சேட்டை செஞ்ச?”

“நான் ஒண்ணுமே பண்ணலையே”

“அடிங்ங்ங்ங் ...நீ ஒண்ணுமே பண்ணாம தான் உன்னைய வஞ்சாராக்கும்”

“இல்ல சித்தீய்ய்ய்.....சூர்யாவும் நானும் சோப்பு தண்ணிய வச்சு பபிள்ஸ் விட்டு வெளாடிட்டு இருந்தோமா....அவன் பபிள்ஸ் விடும்போது அது அவர் மேல பட்ருச்சு...அதுக்கு அவரு நாங்க எச்சி துப்புறோம்னு சொல்லி வஞ்சாரு”

“அதுக்கு சூர்யாவ வையாம உன்ன மட்டும் எதுக்கு வஞ்சாரு”

“அது...அது...அவன் சின்னப் பையன்ல ....நான் பெரிய பிள்ளைல...அதான் அவன வையாம என்னைய வையிறாரு”

“ஏண்டி ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்ல ஒரே கிளாசில தான படிக்குறீங்க...”

“ஆமா.....”

“அப்புறம் அவன சின்னப்பையன்னு சொல்ற”

“அய்யோ சித்தி....அவன விட நாந்தான ஹைட்டா இருக்கேன்...அதனால நாந்தான் பெரிய பிள்ளைன்னு நெனைச்சு என்னை அவரு வையிறாரு ....அவருக்கு தான் தெரியலைன்னா உங்களுக்கும் கூடவா தெரியலை...ஹ்ம்ம்”

“......”

என்னோட மை.வா.....செய்யிறது பூராம் சேட்ட....இதுல வசவு வாங்கிட்டு வந்து வாய் பேசுறதப்பாரு.......அது சரி என்ன இருந்தாலும் நம்ம பிள்ளதான....வேற எப்டி இருக்கும்


No comments:

Post a Comment