Tuesday 25 November 2014

நேற்றைய பொழுது

காலையில அக்காவுக்கு ஃபோன் பண்ணிப் பேசிட்டு இருந்தேன்.

“கீதா , தர்ஷினி ஸ்கூலுக்கு கிளம்பிட்டாங்களா?”

“எங்க..... சின்னவ இப்போ தான் உக்கார்ந்து ஹோம் வொர்க் எழுதிட்டு இருக்கா. பெரியவ தலை வாரிட்டு இருக்கா. ரெண்டு பேரும் இவ்ளோ நேரம் ஒரே சண்டை. நான் சமையல் வேலையப் பார்ப்பேனா....ஆஃபீசுக்கு கிளம்புவேனா ...இல்ல இவளுங்கள சண்டையத் தீர்ப்பேனா.....ஒண்ணும் முடியல. வர வர ரெண்டு பேரையும் சமாளிக்க முடியல. நீயே என்னான்னு கேளு ”

“ம்க்கும் ...நேர்ல இருந்து சொல்லும் போதே என் பேச்சு கேக்க மாட்டாங்க. இதுல ஃபோன்ல சொன்னா மட்டும் கேக்க போறாங்களாக்கும்”

“எனக்கு அடுப்புல வேலை இருக்கு. நீ பேசிட்டு இரு வரேன்”

“சரி தர்ஷினிட்ட ஃபோன குடு”

“ஹலோ சித்தி...”

“என்ன பாப்பா ...அம்மா பேச்சு கேக்க மாட்டேங்குறியாம். சண்டை போட்டுட்டே இருக்கீங்களாம். நீ தானே பெரியவ. நீ தான் அவள அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும். அது சின்னப் பிள்ளை தானே. அவளுக்கு என்ன தெரியும்?”

“நான் எவ்ளோ தான் சித்தி அட்ஜஸ்ட் பண்ணிப் போறது. அவ எப்பப் பார்த்தாலும் எங்கூடவே வம்பு இழுக்குறா”

“சரிப்பா ...நம்ம பாப்பா தானே. கொஞ்சம் பெரியவளானதும் அவளே புரிஞ்சுக்குவா. . . ஃபோன அவகிட்ட குடு. நான் சொன்னா கேட்டுக்குவா.”

“ஹலோ ...சித்தி”

“என்ன கீதா ரொம்ப சேட்டை பண்றியாமே?”

“இல்லையே”

“எப்பப் பாரு அவ கூட சண்டை போடுறியாம்?”

“அவ மட்டும் நேத்து ஃபைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கி சாப்பிடும் போது எனக்குக் குடுக்காம சாப்பிடுறா”

“ஷப்பா....நேத்து நடந்தது, நேத்து சொன்னது, நேத்து சண்டை போட்டதெல்லாம் மறந்துடணும். புரியுதா? நேத்துங்கிறது முடிஞ்சு போச்சு. இப்போ இன்னைக்கு என்னவோ அதை மட்டும் தான் பார்க்கணும். சரியா? இனிமே ரெண்டு பேரும் சண்டை போடாம இருக்கணும் . குட் கேர்ள்னு எல்லரும் சொல்ற மாதிரி நடந்துக்கணும்....ஓக்கேவா?”

“ம்ம்ம்.... சரி சித்தி”

“சரி ஃபோன கட் பண்றேன். அம்மாகிட்ட அப்புறமா பேசுறேன்னு சொல்லு”

“சரி”

ரெண்டே நிமிஷத்துல திரும்ப அக்காகிட்ட இருந்து ஃபோன்.

“ஏய்....ஃபோன்ல கீதா கிட்ட என்ன சொன்ன?”

“ஹி ஹி ஏன்....இனிமே அக்கா கூட சண்டை போட மாட்டேன்னு சொன்னாளா?”

“நேத்து குடுத்த ஹோம் வொர்க்க நேத்தே மறந்துடணும்னு சித்தி சொன்னாங்க. அதனால இப்போ ஹோம் வொர்க் எழுத மாட்டேன்னு அடம் பிடிக்குறா”

” ஞே ???????????”

No comments:

Post a Comment