"ஏங்க இன்னைக்கு சாம்பார் எப்டி இருக்கு?”
“ம்ம்ம் எப்டி இருக்குன்னா..... வாய் வரைக்கும் வருது...ஆனா...”
“எது? வாந்தியா?”
“இல்லடி. வார்த்தைய சொன்னேன்”
“ஓஹ்...சரி சொல்லுங்க”
“ஏதோ ஒரு டேஸ்ட்ல இருக்கு....எப்டின்னு சொல்லத் தெரியல”
’அன்னைக்கு முள்ளங்கி சாம்பார்ல சாம்பார் பொடிக்கு பதிலா வத்தக் குழம்பு பொடி போட்டு வச்சிருந்தேனே. அது மாதிரியா?”
“சீச்சீ ...அவ்வளவு கேவலமால்லாம் இல்ல”
“அப்போ இன்னொரு நாள் முருங்கைக்காய் சாம்பார்ல மிளகாப்பொடி அதிகமாப் போட்டு கோரமா ...ச்சே காரமா வச்சிருந்தேனே...அது மாதிரியா”
“சேச்சே அந்த அளவுக்கு மோசமா இல்லப்பா”
“அப்போ போன வாரம் சாம்பார்ல உப்பே போடாம பருப்பும் வேகாம இருந்திச்சே அது மாதிரியா?”
“இல்லல்ல அப்டில்லாம் இல்ல”
“ரைட்டு.. இப்ப சொல்லுங்க. சாம்பார் எப்டி இருக்கு?”
“சூப்பர்ப்பா”
“ஆங்ங்ங்ங் ....அது”
மை.வா : சக்ஸஸ்ஸ்ஸ்.... சமையல் பழகிப் போச்சு ....... அவருக்கு
No comments:
Post a Comment