Monday 15 December 2014

இடியாப்ப அச்சு

காலங்காத்தால 6:00 மணிக்கெல்லாம் (!!!!) காலிங் பெல் சத்தம் கேட்டு திடுக்குன்னு எழுந்து போய்ப் பார்த்தா பக்கத்து வீட்டுப் பையன்.

“என்னடா சக்தி”

“அம்மா ....இடியாப்பம் பிழியுறது வாங்கிட்டு வரச் சொன்னாங்க ஆண்ட்டி”

“இரு வரேன்”னு சொல்லிட்டுப் போய் எடுத்துக் குடுத்தேன்..

உதய்க்கும் தூக்கம் கலைஞ்சு போய்..... “யாரது ..இந்நேரத்துல காலிங்பெல் அடிச்சுட்டு”

“பக்கத்து வீட்டுப் பையன்”

“என்னவாம்”

“இடியாப்பம் பிழியுறது கேட்டு வந்தான்”

“ப்ச் ...அதுக்கு இவ்ளோ காலங்கார்த்தால இப்டியா காலிங் பெல் அடிச்சுக் கேக்குறது”

“ம்ம்.. தப்பு தான்”

“கதவைத் தட்டியாவது கேக்கலாம்ல...காலிங்பெல் அடிச்சது தலை வலிக்குது”

“சரி அவனுக்குத் தெரிஞ்சது அவ்ளோ தான்”

“ இதெல்லாம் சொந்தமா வாங்கி வச்சுக்க வேண்டியது தான ....காலையில வந்து கடன் கேட்டுட்டு”

“ம்ம்ம்”

” இனி தூங்கின மாதிரி தான். ”

“சின்னப் பையன் தான ...”

"நீ போய் அவங்க அம்மாகிட்ட சொல்லு ...இனி எதும் கேக்குறதுன்னா கதவைத் தட்டிக் கேக்க சொல்லுங்க ...காலிங்பெல் அடிக்காதீங்கன்னு”

“ சரி விடுப்பா ...எனக்கு தூக்கம் வருது”

திடீர்னு ஞாபகம் வந்து “ஆமா ...நம்ம வீட்ல ஏது இடியாப்பம் பிழியுறது????”

“அது அவங்களோடது தான் .....போன வாரம் நான் தான் அவங்ககிட்ட இருந்து இடியாப்பம் செய்யலாம்னு  வாங்கிட்டு வந்தேன்.... திருப்பிக்குடுக்க மறந்துட்டேன்”

.............

என்னவோ திட்ற மாதிரி சத்தம் கேட்டுச்சு ...அதுக்குள்ள நான் தூங்கிட்டேன்

1 comment:

  1. ஹ ..ஹஹா .... ஐயோ ,..ஹய்யோ ... கடைசில நல்ல காமெடி....!!!

    ReplyDelete