Monday 5 January 2015

சட்டை

காலையில கீழ்வீட்டுக்காரம்மா எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. அவங்களப் பார்த்தாலே ஒரு பயம் வரும் .ஆள் அந்த அளவுக்கு பல்க்கா இருப்பாங்க. (எப்பப் பார்த்தாலும் மருமக கூட சண்டை போட்டுட்டே இருப்பாங்க)

“வாங்க ஆண்ட்டி. உள்ள வாங்க”

“ இருக்கட்டும்மா. இது உங்க வீட்டுக்காரர் சட்டையா?”

வாங்கிப் பார்த்துட்டு, “ஆமா ஆண்ட்டி”

“நேத்து காயப் போட்ட துணியெல்லாம் எடுக்கும் போது மாத்தி எடுத்துட்டு வந்துட்டேன். என் பையன்கிட்டயும் இதே மாதிரி சட்டை இருக்கு. அதான்”

“ஓ.. அப்டியா ...பரவால்ல ஆண்ட்டி. நானும் மிஸ்ஸானத கவனிக்கல”

“ம்ம் சட்டை காலர்ல பாரும்மா. அழுக்கு சரியாப் போகல”

“ஆமால்ல. .சரியா பிரஷ் போடல போல”

“ஏதோ தனிக்குடித்தனம் இருக்கதால தப்பிச்சம்மா. இல்லேன்னா உங்க அம்மா துணி துவைக்கக் கத்துக்குடுக்கலையான்னு உங்க மாமியார் திட்டியிருப்பாங்க”

“அப்டி திட்டுறதுன்னா எங்க வீட்டுக்காரரத் தான் திட்டணும் ஆண்ட்டி. ஏன்னா இந்த சட்டையத் துவைச்சது அவரு தான்”

“ஆங்ங்”

“ஆமா ஆண்ட்டி ..உங்க வீட்டுலயெல்லாம்  உங்க மருமகளா துவைக்குறாங்க.அய்யோ பாவம்”

“நான் வரேன்”னுட்டு திரும்பிப் பார்க்காம போய்ட்டாங்க..

No comments:

Post a Comment